மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாநகராட்சி 31வது வார்டில் உள்ள மின் கம்பம் திடீரென எரிய தொடங்கியதால் பரபரப்பு உண்டானது.  

திண்டுக்கல் மாநகராட்சி 31வது வார்டில் உள்ள மின் கம்பம் திடீரென எரிய தொடங்கியதால் பரபரப்பு உண்டானது.
திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைசாமிபுரம் 4வது தெருவில் உள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பொறி வந்தது. சிறிது நேரத்தில் மின் கம்பம் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறினர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது. இதனால் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீப்பொறி பரவி வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மின் வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story