வீட்டு வாசல்களில் கேட்பாரற்று கிடந்த ஆயுதங்களால் பரபரப்பு

வீட்டு வாசல்களில் கேட்பாரற்று கிடந்த ஆயுதங்களால் பரபரப்பு

காவல் நிலையம் 

மானாமதுரை அருகே வீட்டு வாசல்களில் கேட்பாரற்று கிடந்த ஆயுதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சந்தன கருப்பு. இவர் வேலூர் முருக பஞ்சான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நல்லுசாமி, சத்யபிரியன், பழனிகுமார், கருப்புசாமி என்கிற காத்தார். ஆதிநாராயணன், தங்கதுரை என்கிற ராமச்சந்திரன், மதன்குமார் ஆகியோர்களின் வீட்டின் முன்பு கேட்பாரற்றுக் கிடந்த 1 வாள் , 2 கத்தி, 11 அரிவாள், 3 இரும்பு பட்டா, 3 இரும்பு கம்பி, 2 இரும்பு சுத்தியல், 1 காக்கை பட்டை, 1 கோடாரி, 1 பூந்தாரம் ஆகிய ஆயுதங்கள் கிடந்த நிலையில் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story