மரங்களை டெண்டர் விடுவதற்கு போலீசாருடன் வந்ததால் பரபரப்பு

மரங்களை டெண்டர் விடுவதற்கு போலீசாருடன் வந்ததால் பரபரப்பு

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் 

அரளி குத்து குளத்தில் மரங்களை டெண்டர் விடுவதற்கு போலீஸாருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் கிராமத்திற்கு உட்பட்ட வெடிக்காரன் வலசு பகுதியில் உள்ள அரளி குத்து குளத்தை சிப்கோ அமைப்பதற்காக அரசு அதிகாரிகள் குளத்தில் இருக்கக்கூடிய மரங்களை அகற்றுவதற்காக இன்று அதனை டெண்டர் விடுவதற்கு கணக்கெடுக்க போலீசாருடன் வந்தனர்.

இந்நிலையில் இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக் கணக்கானோர் இந்த பணியை உடனடியாக நிறுத்தி விட வேண்டுமென தெரிவித்ததை அடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் இங்கு மேலும் சிட்கோ அமைக்கும் பணிகளை மேற்கொண்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறியதை எடுத்து அதிகாரிகள் மரங்கள் வெட்டும் பணியை கணக்கெடுக்காமல் நிறுத்திவிட்டு கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story