தூத்துக்குடி மாநகராட்சியில் 30ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது -ஆணையர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் 30ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது -ஆணையர் தகவல்

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

வருகின்ற 30ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி துண்னை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 30ஆம் தேதி (செவ்வாய் கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 30ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story