திருச்சியில் ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது - தகவல்

திருச்சியில் ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது - தகவல்

திருச்சியில் ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது - தகவல்

பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் பராமரிப்பு பணி 20.02.2024 அன்று காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், 21.02.2024 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 22.02.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story