போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி - 3 பேர் கைது 

போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி -  3 பேர் கைது 
பைல் படம்
பூதப்பாண்டியில் போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மாவட்டம் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டரின் போலி முத்திரைகளை பயன்படுத்தி போலியாக சான்றிதழ் தயார் செய்து சார் பதிவாளர் அலுவலகங்களில் காணாமல் போன மற்றும் வில்லங்க சான்றுகளுக்கான பத்திரங்களின் நகல் பெற்றுள்ளதாக புகார்கள் வந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் போலி முத்திரைகளை பயன்படுத்தி தொலைந்து போன சொத்து பத்திரங்கள் மற்றும் வில்லங்க சொத்துகளுக்கான நகல்களை பெற்றது உறுதி செய்யப்பட்டது." இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் ஒன்பது பேர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது மோசடி உட்டட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் திமுக பெண் பிரமுகர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் திமுக நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 6 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags

Next Story