இலுப்பூரில் நாளை தேரோட்டம்!

இலுப்பூர் சொர்ணாம்பிகை கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.
இலுப்பூர்: புதுகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழா வின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (21ம் தேதி) நடக்கிறது. 22ம் தேதி மாலை தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story