திருவள்ளூரில் வள்ளி பஞ்சலோக சிலை திருட்டு !

திருவள்ளூரில் வள்ளி பஞ்சலோக சிலை திருட்டு !

காட்சி 

திருவள்ளூரில் வள்ளி பஞ்சலோக சிலை திருடிச் சென்ற முதியவர் குறித்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வள்ளலார் தெருவில், வள்ளல் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், அங்கிருந்த பஞ்சலோக வள்ளி சிலை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார், கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், கோவிலுக்கு வந்த முதியவர் ஒருவர், சுவாமி கும்பிடுவது போல், அங்கிருந்த 1.5 அடி உயரம், 10 கிலோ எடையுள்ள பஞ்சலோக வள்ளி சிலையை, கோணிப்பையில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்து வழக்கு பதிந்த போலீசார், சிலையை திருடிச் சென்ற முதியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story