பாப்பாரப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் பாமகவினர்

பாப்பாரப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் பாமகவினர்

பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாப்பாரப்பட்டியில் தேசிய கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாஜக மாவட்ட தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரித்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாப்பாரப்பட்டி பகுதியில் இன்று தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து,

பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசும்பொழுது ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும் மாவட்ட மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க உங்களில் ஒருவராக நாடாளுமன்றத்தில் நான் இருப்பேன் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story