பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் நல உதவி வழங்கினர்

பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் நல உதவி வழங்கினர்

பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் நல உதவி வழங்கினர்

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பெத்தநாடாா்பட்டி பகுதியில் 7 பேரின் வீடுகள் கன மழையால் இடிந்து விழுந்தன. இப்பகுதிகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி திமுக சாா்பில் அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் மற்றும் நிதியுதவியை வழங்கினாா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியகுழு தலைவா் காவேரி சீனித்துரை, ஊராட்சித் தலைவா் ஜெயராணி, துணைத் தலைவா் ஜெயராணி, ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் தீபன்சக்கரவா்த்தி, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஆல்பின்ராஜ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவா் அருணாபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story