கோவை அருகே கொள்ளையடித்த வீட்டின் நடுவே மலம் கழித்து சென்ற திருடன்

கோவை அருகே கொள்ளையடித்த வீட்டின் நடுவே மலம் கழித்து சென்ற திருடன்

வீட்டின் நடுவே மலம் கழித்து சென்ற திருடன்

கோவை அருகே கொள்ளையடித்த வீட்டின் நடுவே மலம் கழித்து சென்ற திருடனை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியை குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44) கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.விடுமுறை என்பதால் இவரது மனைவி மற்றும் மகன் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி சென்றுள்ளார்.இன்று காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்தபோது படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்த நிலையில் பீரோவில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

வீட்டின் பின்பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் விசாரணை மேற்கொண்டார்.

வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது நகை 22 பவுன்,பணம் 3 லட்சம் கொள்ளை போனதாக‌ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் வீட்டின் நடுவே மலம் கழித்து சென்றது கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story