மேட்டூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம்

மேட்டூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம்

மேட்டூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் 

சேலம் மாவட்டம்,மேட்டூரில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
மேட்டூர் அருகே வீரனூரில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலுக்கு அழகுற கோபுரம் அமைத்தல் ,முன் மகா மண்டபம், பஞ்சகால வர்ணங்கள் தீட்டப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. வரும் வியாழக்கிழமை இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. ஜண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் 500- கும் மேற்பட்ட பெண்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் மற்றும் அண்ணாதுரை, சின்ராஜ் ,மாணிக்கம் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story