மே தின கிரேன் விழிப்புணர்வு பேரணி

மே தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு கிரேன் ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு கிரேன் ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சேகர், செயலாளர் வெங்கடேஸ்வரன், பொருளாளர் ரத்தினம்,ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, உப தலைவர் சீனிவாசன், உப செயலாளர் ராஜசேகர், ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். வழி எங்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story