தென்பாற் கடற்கரையில் திருஏடு வாசிப்பு திருவிழா

தென்பாற் கடற்கரையில் திருஏடு வாசிப்பு திருவிழா
ராஜாக்கமங்கலத்தில் திரு ஏடு வாசிப்பு துவக்கம்
ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரையில்உள்ள அய்யா வைகுண்டர் தவவனத்தில் நடந்த திருஏடு வாசிப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தவவனத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி மார்ச் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா அன்று அய்யாவிற்கு சிறப்பு பணிவிடைகளும் தொடர்ந்து திருஏடு வாசிப்பும் நடந்தது. நிகழ்ச்சிக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி திருஏட்டினை எடுத்து வழங்கினார். திருஏட்டினை செண்பகப் பெருமாள், மாலதி ஆகியோர் வாசித்தனர்.

மார்ச் ஒன்றாம் தேதி அய்யாவிற்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெறுகிறது இரண்டாம் தேதி அம்மைமார் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது. மார்ச் மூன்றாம் தேதி அய்யா வைகுண்டர் அவதாரதின விழாவும் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது .அன்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும் பகல் உச்சி படிப்பும் சிறப்பு அன்னதர்மமும் நடைபெறுகிறது . மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேக விழா திரு ஏடு வாசிப்பு நடைபெறுகிறது விழாவில் அய்யா வழி பக்தர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி மேலாளர் ராஜன் பணிவிடையாளர் அய்யாதுரைநாடார்,ராமசந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story