பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ வைபவம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதன கோபால சுவாமி பெருமாள் கோவிலில் ஜூன் 5-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஸ்ரீதேவி சமேத பூதேவி ஆண்டாள், ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கல்யாண வைபவம்நடைபெற்றது,

வையாழி சேவையுடன் தொடங்கி, பட்டாச்சாரியார்களின் மாலை மாற்றுதல் மற்றும் திருமண வைபவங்களை முடித்து பெருமாள் திருகல்யான உற்சவம் பக்தர்களின் கோவிந்தா முழக்கமிட, மங்கள வாத்தியம் முழங்க வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது, விழாவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மற்றும் சரவணன், குமார், சண்முகம், ஜெய், கணேஷ், மற்றும் ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர், உள்ளிட்ட பக்தர்கள், திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags

Next Story