சோமாசிபாடி முருகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சோமாசிபாடி முருகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாணம் 

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரையடுத்த சோமாசிபாடியில் உள்ள பாலசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகர் கோயிலில் கடந்த 12ம் தேதி கந்தசஷ்டி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை,வழிபாடு நடத்தப்பட்டு தினமும் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருதல் நடந்தது. கடந்த 18ம்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடந்தது. காலையில் கோயில் உட்பிரகாரத்தில் உற்சவர் வள்ளி தேவ சேனா சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, தீபாராதனையும் நடந்தது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடந்தது. இதில் சுற்றுப்புற ஊர்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

Tags

Next Story