கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவம் 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கும்பகோணம் குடந்தை கொட்டையூர் கோடீஸ் வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கொடியற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் காலை சுவாமி,அம்பாள் பல் லக்கிலும், இரவு சூரிய பிரபை, சந்திர பிரபை, சேஷம், கமலம்,பூதம், சிம்ம, யானை, அன்னபட்சி வாகனத்திலும், கடந்த 19ம்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா நடந்தது. 21ம்தேதி இரவு பந்தாடுநாயகி அம்பிகா சமேத கோடீஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந் துகொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனர்.இன்று 23ம்தேதி காலை திருத்தேரோட்டமும், நாளை 24ம்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கோயில்பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story