குமாரசாமிபேட்டையில் சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவ வைபவம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட குமாரசாமிப்பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமாதி ஸ்ரீ சென்னகேசிவ பெருமாளுக்கு நேற்று ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டுதிருக்கல்யாண வைபவம் நடந்தது.

சித்திரை 04 புதன்கிழமை வளர்பிறை தசமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் துலா லக்னத்தில் ஸ்ரீ உபயநாச்சியார் சமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story