காமாட்சி அம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

காமாட்சி அம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாணம்

காமாட்சி அம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கிலி கருப்பினார் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் 43 வது வருட பொங்கல் பண்டிகை நடைபெற்றது இதில் எட்டாம் நாள் திருவிழாவாக காமாட்சி அம்மன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் ஆசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, சுரேஷ்பாபு நகர அதிமுக செயலாளர் அங்கமுத்து, திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, 21 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மல்லிகா, ஆலய கமிட்டி தலைவர் கண்ணன்,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானசேகரன், மற்றும் ரகுநாதன் நடராஜன்,செல்வராஜ்,கலைசிலன் போன்ற ஆலய கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Tags

Next Story