ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

திருகல்யாணம்

ஆறகளூரில் உள்ள காமநாதஈஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை முன்னிட்டு நடைபெற்ற திருகல்யாணதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள காமநாதஈஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை முன்னிட்டு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜப் பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டார் அழைப்பு நடந்தது. தொடர்ந்து சிவகாமசுந்தரிக்குமங்கல தாலி கட்டி மாலை மாற்றி நடராஜ பெருமானின் திருமண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் மலர் தூவி வழிபாடு செய்தனர். கோவில் சிவாச்சாரியார் ரவி குருக்கள் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

Tags

Next Story