பெரம்பலூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் தரிசனம் ..... பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் மார்ச் 22 ஆம் தேதி மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

விழாவில் உபயதாரர் சென்னை மருத்துவர் பாலாஜி, மற்றும் செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், சரவணன், குமார், மகேஸ்வரன், நடராஜ், ராஜேந்திரன் .மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர் அதன் தொடர்ச்சியாக இரவு 8 மணியளவில் பெருமாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,இதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story