திருக்களம்பூர் தமிழ் ஆர்வலர்க்கு விருது!

திருக்களம்பூர் தமிழ் ஆர்வலர்க்கு விருது!

விருது

திருக்களம்பூர் தமிழ் ஆர்வலர்க்கு விருது!
மதுரையில் நடந்த சர்வதேச முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் நெ. ராமச்சந்திரனுக்கு செந்தமிழ்ச்சுடர் விருது வழங்கப்பட்டது. மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய சர்வதேச முத்தமிழ் விருது வழங்கும் விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் வள்ளல் பாரி நற்பணி மன்றத் தலைவரும், தமிழ்ச்செம்மல் விருதாளருமான நெ.ராமச்சந்திரனின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி செந்தமிழ்ச்சுடர் விருது வழங்கப்பட்டது. விழாவில் முத்தமிழ் நாட்டுப்புறக்கலைகள் ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் நெ. ஞானவேல், நாகரெத்தினம் அங்காளம்மாள் கல்லூரி முதல்வர் வி. வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story