தூத்துக்குடியில் திருக்குறள் முற்றோதல் போட்டி

தூத்துக்குடியில் திருக்குறள் முற்றோதல் போட்டி

திருக்குறள் வாசிப்பு 

தூத்துக்குடியில் சிஎம் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடைபெற்றது.

பாளையங்கோட்டை சைவ சபை சார்பில் தூத்துக்குடி சிஎம் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்வு சபையின் துணைத் தலைவர் சைவ நெறி காந்தி தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் சொக்கலிங்கம், செந்தில் ஆறுமுகம், டிஏ தெய்வநாயகம், பள்ளி தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் ஆகியோர் முன்னில வகித்தனர். ராஜம் s வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை விமலா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். புலவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ஒரு அதிகார வீதம் திருக்குற RSS dsளை முற்றொதுதல் செய்தனர். சைவ சபையின் செயற்குழு உறுப்பினர் கந்தப்பன் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் நூலினை வழங்கினார். நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மாள், முத்தையா பிள்ளை, சுப்பிரமணியன், ஆறுமுகம், அன்பழகன், பிச்சையா, முருகன், ராமகிருஷ்ணன், கவிஞர் இளமுருகு, ஆறுமுகம், மாரி ராஜா, வெங்கடேசன், சோமநாதன், தமிழ் ஆசிரியை தெரசின் ஜவி ஆகியோர் கலந்து கொண்டனர். சைவ சபையன் அமைச்சர் முத்து வேல்விழி நன்றியுரை கூறினார்

Tags

Next Story