திருக்கோவிலுார்‌ : மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா

திருக்கோவிலுார்‌ : மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா

மெய்பொருள் நாயனார் குரு பூஜை 

திருக்கோவிலுார்‌ மெய்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றம் சார்பில் நாளை 6ம் தேதி குருபூஜை விழா நடக்கிறது. வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில்,செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் விழாவைத் துவக்கி வைக்கிறார். மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருவண்ணாமலை ஜீவா அம்மாள், புதுச்சேரி தணிகாசலம், எலந்தம்பட்டு அருணாசலம், விருத்தாசலம் 63வர் திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர்ஜி முன்னிலை வகிக்கின்றனர். இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை,மலர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மெய்பொருள் நாயனர் மூலமூர்த்திக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு மெய்பொருள் நாயனார் சொற்பொழிவு ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடக்கிறது.

Tags

Next Story