சுகந்தவன பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

சுகந்தவன பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திருமஞ்சனம் நிகழ்வு

சுகந்தவன பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுகந்தவன பெருமாள் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் பெருமாள் தாயார்கள் கருடாழ்வார், ஶ்ரீஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆழ்வார்கள் மற்றும் உற்சவ தெய்வங்களான பெருமாள் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து தெய்வங்களுக்கு புதுப்பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.

Tags

Next Story