திருமருகலில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருமருகலில்   திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல் 

நாகை மாவட்டம் திருமருகலில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகலில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் கோடைகாலத்தை ஒட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமருகல் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் கலந்து கொண்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகள், நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார்,ஜெயபால்,மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் விஜயகணபதி,ஒன்றிய துணை செயலாளர்கள் மதியழகன்,அஞ்சா நெடுமாறன்,ஒன்றிய பொருளாளர் தமிமுன் அன்சாரி,திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story