கனமழை அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும்- திருமாவளவன்

கனமழை அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும்- திருமாவளவன்

கனமழை அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும் என, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் கூறியுள்ளார். 

கனமழை அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும் என, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் கூறியுள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வரலாறு காணாத வகையில், சுமார் 100செமீ. மழை பதிவாகியிருப்பது, யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் மதிப்பிடமுடியாத வகையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்னும் வானிலையால் அணைகட்டுகள் பல திறந்து விடப்பட்டுள்ளன.

அதனால், தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களின்றி பரிதவிக்கின்றனர். அரசு தமது மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை மேலும் திறம்பட ஆற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மென்மேலும் பெருமழை தொடர்வதால் பீதியில் உறைந்து கிடக்கும் மக்களைத் பெருந்துயரிலிருந்து விரைந்து மீட்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்படாத பிற மாவட்டங்களைச் சார்ந்த விசிக தோழர்கள், குறிப்பாக, முன்னணி பொறுப்பாளர்கள் இயன்ற வகையில் மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என விசிக தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story