செளமிய நாராயண பெருமாள் திருவீதி உலா

செளமிய நாராயண பெருமாள் திருவீதி உலா

திருவீதி உலா

சித்திரை பெருவிழாவை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருநாளில் உற்சவர் பெருமாள் தங்க பல்லக்கில் பவனி வந்து பக்தர்கள் அருள்பாலித்தார்.

முன்னதாக முத்தனன் மண்டகப்படி திருநாள் மண்டபத்தில் உற்சவர் ஶ்ரீ சௌமிய நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சர்வ அலங்காரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வானவெடியுடன் மின்னொழியில் பவனி வந்த சௌமிய நாராயண பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story