திருத்துறைப்பூண்டி : ஐம்பொன் சிலை கடத்திய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டி : ஐம்பொன் சிலை கடத்திய 2  பேர் கைது

மீட்க்கப்பட்ட ஐம்பொன் சிலை 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தனுக்கு சிலை கடத்தல் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக துணை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மன்னார்குடி அருகே உள்ள பயங்காடு கிராமத்தை சேர்ந்த ரஜினி என்கிற பிரபு 46., மன்னார்குடி சோழபாண்டி பகுதியைச் சேர்ந்த அழகர் 24., ஆகிய இருவரும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஒன்றரை கிலோ ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலையை விற்பனைக்காக கடத்தி வந்தனர் . இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story