சோமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்

சோமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்

சோமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்

சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் திருவாதிரையையொட்டி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மார்கழி மாத பௌர்ணமி திருவாதிரையையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவமூர்த்திகளுக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவபுராண பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் இப்பூஜையில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story