சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை 

திருவாலங்காடு அருகே அத்திப்பட்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் 2 கி.மீ., தார்ச்சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு தார் பெயர்ந்து ஜல்லி சிதறி பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story