திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தினம்

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் திருவள்ளுவர் தின விழா! பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் வருடந்தோறும் திருவள்ளுவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்குவதும் உண்டு. அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் அனைவருக்கும் இலவசமாக சிலப்பதிகாரம் புத்தங்கங்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன், நகராட்சி கவுன்சிலர் சரவணன், பாவேந்தர் பேரவை செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம், பசுமை தில்லை சிவகுமார், நாச்சிமுத்து, மருதமுத்து, மதியழகன், வேலுசாமி,செந்தில், செல்வன்,சேகர், அய்யாசாமி, ஜெயச்சந்திரன், சிவலிங்கம், ராமசாமி, மாணிக்கம், ராஜசேகரன், பழனியாண்டி, கண்ணன், கணேசன், பெரியசாமி, செல்வராஜ்,மற்றும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story