கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் 

திருவண்ணாமலையில் வாக்களிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 'குடவோலை தேர்தல் முறை” சிற்பத்தின் ஓவியம் மற்றும் கல்வெட்டு குறிப்புடன் பதாகை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story