திருவண்ணமலை : புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

திருவண்ணமலை : புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பக்தர்களிடம் பெறப்படும் புகார்கள் மற்றும் இதர தகவல்களை பெறுவதற்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 8072502744, 04175-2333444, 04175-233345 என்ற தொலைபேசி எண்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story