வாக்குச்சாவடியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

வாக்குச்சாவடியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

மாவட்ட‌ ஆட்சியர் ஆய்வு 

கீழ்பெண்ணாத்தூர் அருகே பாராளுமன்ற தேர்தலின் போது பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், கோவூர் ஊராட்சியில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆரணி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

Tags

Next Story