பிளஸ்-2 தேர்வில் திருவண்ணாமலை கடைசி இடம்

பிளஸ்-2 தேர்வில் திருவண்ணாமலை கடைசி இடம்

திருவண்ணாமலை கடைசி இடம்

பிளஸ் -2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 12724, மாணவிகள் 13827 மொத்தமாக 26551 பேர் தேர்வு எழுதிய நிலையில் 12724 மாணவர்களில் 11, 037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1687 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 13827 மாணவிகளில் 12, 984 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

843 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 86. 74 சதவீதம், மாணவிகள் 93. 90 சதவீதம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Tags

Next Story