கந்தர்வகோட்டை கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

கந்தர்வகோட்டை கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

திருவாசக முற்றோதல் நிகழ்வு

கந்தர்வகோட்டை கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, பக்தர்கள் சிறப்பு பஜனை செய்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களின் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து அடியார்களுக்கும் 2 அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனாடியார்கள் செய்திருந்தனர்.நிகழ்வில் மாணவர்கள் கல்வியில் சிறக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

Tags

Next Story