சோளீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா

மல்லசமுத்திரத்தில் உள்ள பழமையான சோழீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா மற்றும் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது.
மல்லசமுத்திரத்தில் உள்ள, பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் நேற்று, மார்கழிமாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் அதிகாலை 1மணிக்கு, அபிசேகம் நடந்தது. காலை 5.30 முதல் 6.30மணிவரையில் ஆருத்ரா தரிசனமும், திருக்கல்யாணமும், திருவீதிஉலாவும் நடந்தது. இவ்விழாவில், மல்லசமுத்திரத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் சார்பாக, புளியோதரை, தக்காளிசாதம், களி உள்ளிட்டவை அம்பாள் சீர்வரிசையாகவும், லட்சுமிபுரம், அம்பேத்கார்நகர், பாலிக்காடு, வண்ணாம்பாறை, கொல்லப்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் சார்பாக, ஆலய வளாகத்தில் லட்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story