திருவேற்காடு நகராட்சி கமிஷனர் இடமாற்றம்.

திருவேற்காடு நகராட்சி கமிஷனர் இடமாற்றம்.

நகராட்சி

திருவேற்காடு நகராட்சி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேம்பாட்டு பணி மற்றும் மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளின் தொய்வு காரணமாக, திருவேற்காடு நகராட்சி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை திருவேற்காடு நகராட்சி கமினராக ஜஹாங்கீர் பாஷா என்பவர், 6 மாதமாக இருந்தார்.

ஆனால், அவர் நகராட்சி மேம்பாட்டு பணி, துாய்மை பணியாளர் சம்பள பிரச்னை மற்றும் ‛மிக்ஜாம்' மழை, வெள்ள பாதிப்பு பணி ஆகியவற்றில், உரிய கவனம் செலுத்தாமல், அலட்சியம் காட்டியதாக, புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், 15ம் தேதி, அவர், தேனி மாவட்டம், அல்லிநகரம் சிறப்பு நிலை நகராட்சிக்கும், அங்கிருந்த கணேசன் திருவேற்காடு நகராட்சிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், திருவேற்காடு நகராட்சியில், செயற்பொறியாளர், மேலாளர், வருவாய் உதவி அலுவலர் பணியிடங்களும், சில மாதமாக காலியாக உள்ளன. அவற்றையும் விரைவில் நிரப்பினால், நகராட்சி மேம்பாட்டு பணிகள், சுணக்கமின்றி நடக்கும் என, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story