திருவேங்கடமுடையான் கோவில் கும்பாபிஷேகம்

திருவேங்கடமுடையான் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதையொட்டி, வாஸ்து பூஜையுடன் விழா தொடங்கி, கலச பிர திஷ்டை மற்றும் பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம் நடந்து, இரவில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை கோபூஜை, பிரதான கலச பூஜை, பஜனை நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது, பின்னர், ருக்மணி சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ணர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது, பின்னர், இரவில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story