திருவெண்ணெய்நல்லூர் : மின்மாற்றியில் 150 கிலோ தாமிர கம்பி திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் :  மின்மாற்றியில் 150 கிலோ தாமிர கம்பி திருட்டு
மின்மாற்றி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் ஏரிக்கரை எதிரில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து நேற்று மாலை வரை மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், அந்த மின்மாற்றிக்கு சென்று பார்த்தனர். அப்போது மின்மாற்றியில் உள்ள பெட்டி திறந்து கிடந்தது. அதில் இருந்த எண்ணெய் கீழே கொட்டப்பட்டு இருந்தது. இது பற்றி விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் இளமின் பொறியாளர் சீனிவாசன் நேரில் வந்து மின்மாற்றியை பார்வையிட்டார், அப்போது, நள்ளிரவில் மர்மநபர்கள் மின்மாற்றியை நிறுத்தி பெட்டியை திறந்து அதில் இருந்த 230 லிட்டர் எண்ணெயை கீழே கொட்டி, ரூ.5 லட்சம் மதிப்பிலான 150 கிலோ தாமிர கம்பி மற்றும் உதிரி பாகங்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது, இதுகுறித்து இளமின் பொறியாளர் சீனிவாசன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Tags

Next Story