உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை 

அறந்தாங்கி அருகே வேள்வரை கிராமத்தில், விவசாயம் செழிக்க வேண்டி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேள்வரை கிராமத்தில், 15 ஆம் ஆண்டாக ஐயப்பன் பூஜை நடைபெற்றதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் ஈடுபட்டனர். பூஜையில் விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வர வேண்டிய திருமணத்தடை நீங்க வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் , பலவிதமான வேண்டுதலை வைத்துக் கொண்டு பூஜை ஈடுபட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு, ஐயப்ப பக்தர்கள் சார்பாக அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story