குலசேகரன்பட்டினம் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற 5,008 திருவிளக்கு பூஜையில் அமைச்சா்கள் சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டியும், சீரான மழை பெய்து விவசாயம் - வணிகம் செழிக்கவும், குடும்பங்களில் அமைதி நிலவி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டி உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் 5,008 திருவிளக்கு பூஜையில் நடைபெற்றது.

இப்பூஜையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்து, சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியில், இந்து சமய அறிநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் சங்கா், துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் செயல் அலுவலா் ராமசுப்பிமணியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குத்துவிளக்கு, சேலை, 19 வகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story