தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை 

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவில் இளைஞர் அணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரணை நடந்தது. பின்னர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு இளைஞர் அணிதலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். விழாவில், அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா, அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி, இளைஞர் அணி நிர்வாகிகள் சக்திவேல், கோபால், ஜெயராம், கிருஷ்ணன், தங்கவேல், மீனாட்சி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story