திருவில்லிபுத்தூர்; வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவில்லிபுத்தூர் நகராட்சி மஜீத் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடி மதிப்பீட்டில்; கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும், திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மருத்துவர் காலனி FSTP வளாகத்தில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ரூ.42.50 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story