சமயபுரம் மாரியம்மன் முத்துப் பல்லக்கில் திருவீதி உலா

சமயபுரம் மாரியம்மன் முத்துப் பல்லக்கில் திருவீதி உலா

முத்துபல்லக்கில் வீதி உலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா 12 ம் நாளில் அம்மன் முத்துப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்ட விழா கடந்த 16 ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்நிலையில் சித்திரை தேர்த்திருவிழா ,12 ம் நாளில் அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story