தியாகதுருகம் : குட்கா விற்ற பெண் மீது வழக்கு

தியாகதுருகம் : குட்கா விற்ற பெண் மீது வழக்கு

காவல் நிலையம்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அதில் வசந்தி,55; என்பவரது பெட்டிக்கடையில் சோதனை நடத்தினார். அதில் தடை செய்யப்பட்ட ரூ. 1,750 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வசந்தி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story