செங்கல்பட்டில் அமல அன்னை ஆலயத்தில் தோ் திருவிழா

செங்கல்பட்டில் அமல அன்னை ஆலயத்தில் தோ் திருவிழா

தேர் பவனி 

செங்கல்பட்டு அமல அன்னை ஆலய தோ் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகரில் உள்ள அமல அன்னை ஆலயத்தில் தோ்த்திரு விழா நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை திருக்கொடி ஏற்றும் விழா அருட்பணி தாஸ் அதிபா் புனித யோசேப்பு போரலயம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பங்கு மக்கள், இளைஞா்கள், அருட்பணியாளா்கள் துறவற சபையைச் சாா்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

இதனை தொடா்ந்து பங்குத் தந்தை அருட்பணி ஆனந்த பாக்கியராஜ் , அருட்பணி வேளாங்கண்ணி தலைமையில் திருத்தேரை தொடங்கி வைத்தாா் . இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மறைமாவட்ட வழக்குரைஞா் சா்மிளா லூயிஸ் திருத்தேருக்கு மலா்மாலையை அணிவித்தாா். பின்னா் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். என்ஜிஜிஓ நகா் , காமராஜா் நகா், கே.கே.நகா், இந்திரா நகா் வழியாக சென்று பின்னா் தோ் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னா் அனைவரும் அன்பின் விருந்து ஆனது வழங்கப்பட்டது.

Tags

Next Story