விழுப்புரத்தில் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

விழுப்புரத்தில் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

தொல் திருமாவளவன் பிரச்சாரம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளரை ஆதரித்து தொல்.திருமாவளவன் விழுப்புரம் நகர பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரம் நகர பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி: பெரியாரின் வழியை பின்பற்றும் நமது ரவிக்குமாரை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும். சின்னம் பெரிதல்ல நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் தான் முக்கியம். யார் வரவேண்டும் என்பதை மட்டுமல்ல யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். இதில் பேசிய‌ திருமாவளவன்: உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி, அம்பானி இடம்பிடிக்க உதவும் பிரதமர் நரேந்திர மோடி உழைக்கும் மக்களின் வாழ்வு முன்னேற என்ன செய்தார்? வகுப்புவாத்தையும் மதவாதத்தையும் புகுத்தி பிரிவினையை வளர்த்து சமத்துவத்தை சிதைத்து வருகிறார். வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டாத பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை அமைத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியா நாட்டையும் ஜனநாயகத்தையும் காத்திட நாற்பதற்கு நாற்பது தொகுதிகளையும் வென்று காட்ட வேண்டும் என பேசினார்.

Tags

Next Story