ராசிபுரத்துக்கு விசிட் செய்த தொல்.திருமாவளவன்

ராசிபுரத்துக்கு விசிட் செய்த தொல்.திருமாவளவன்

ராசிபுரத்துக்கு விசிட் செய்த தொல்.திருமாவளவன்

'வெல்லும் ஜனநாயகம்' என்னும் மாநாட்டை முன்னிட்டு ராசிபுரத்துக்கு விசிட் செய்தார் தொல்.திருமாவளவன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' என்னும் மாநாடு 23ம் தேதி நடக்கிறது. இதற்காக, விசிக., தலைவர் தொல்.திருமாவளவன் மண்டலம் வாரியாக மாவட்ட செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, இன்று சேலத்தில் மண்டலக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு மாலை 5:30 மணியளவில் வந்த விசிக., தலைவர் தொல்.திருமாவளவன் ராசிபுரம் நகராட்சி 4.வது வார்டு விசிக., உறுப்பினர் பழனிசாமி தலைமையில் கிழக்கு தெருவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட விசிக., அலுவலகம் ராசிபுரம் பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ளதை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அவருக்கு மாவட்ட கழகச் செயலாளர் அர்ஜுன் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். தொண்டர்கள் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்தனர். அதனை தொடர்ந்து செல்ஃபி எடுத்தும் கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் அங்கிருந்து சேலம் கிளம்பினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட விசிக., அலுவலகம் ராசிபுரம் அலுவலகம் மிகச்சிறியது என்பதால், 100க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags

Next Story